இந்தியன்-2 பட பிடிப்பு வழக்கு: மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்..." alt="" aria-hidden="true" />
சென்னை: இந்தியன் 2 படபிடிப்பு வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.
கடந்த 19-ம் தேதி இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் நடிக்கும் இந்தியன்2 படப்பிடிப்பு இவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது.
அப்போது கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலியாயினர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இதனையடுத்து நசரத்பேட்டை போலீசார் கிரேன் ஆபரேட்டரை கைது செய்தனர்மேலும் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இயக்குனர் ஷங்கருக்கும் நடிகர் கமலஹாசனுக்கும் இச்சம்பவம் குறித்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
படபிடிப்பு விபத்து வழக்கை நசரேத்பேட்டை போலீசார் விசாரண நடத்தி வந்தனர். இந்நிலையில் வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்து சென்னை காவல்ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.